சற்று முன்



திமுக உள்கட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளில் உள்கட்சித் தேர்தல்கள் முறைப்படி நடக்கின்றனவா?

காங்கிரஸ் கட்சியின் அடுத்தடுத்த தோல்விகளைத் தொடர்ந்து, அக்டோபர் 17ஆம் தேதியன்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் அக்டோபர் 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கட்சியில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24ஆம் தேதியன்று தொடங்கியது.


தமிழகத்திலும், திமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சித் தேர்தலை நடத்தி, அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. ஆனால், இந்திய அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் தேர்தல்கள், ஜனநாயக முறைப்படி தான் நடக்கின்றனவா?

ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்போது அங்கேயும் ஜனநாயகம் இல்லை என்கிறார் அரசியல் நோக்கரும் மூத்த பத்திரிகையாளருமான ராதாகிருஷ்ணன்.

"சமீபத்தில் சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் தேர்தல் கேரளாவில் நடந்தது. அதில், ஒரு குழுவினர் வயது வரம்பைக் கொண்டு வந்து எதிர்த்தரப்பைச் சேர்ந்தவரை மாநில கமிட்டியிலிருந்தே நீக்கினார்கள். இந்த வயது வரம்பு முறையை முதலில் கொண்டு வந்தது பாஜக.

கருத்துகள் இல்லை