சற்று முன்



பகாசூரன் திரை விமர்சனம் !


 இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவன் நடித்து இன்று வெளியாகி இருக்கின்ற திரைப்படம் தான் “பகாசூரன்”. இப்படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரெளபதி என பல வெற்றிப்படங்களை ருத்ரதாண்டவம், இயக்குனர் மோகன் ஜி இயக்க சாம் சி எஸ் இசையமைத்திருகிறார். மேலும் நடராஜ், ராதாரவி, ராஜன், மன்சூர் அலி கான், தர்க்ஷ, என பலர் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

கதையில் தன்னுடைய அண்ணன் மகன் மேற்க்கொண்ட மர்மமான தற்கொலையை தொடர்ந்து அதற்கான காரணத்தை தேடுகிறார் மேஜர் நட்டி. அந்த காரணத்தைக் கண்டு மிரண்டு போன நட்டி காரணத்தைக் போன்று பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க அவர்களின் பாதிக்கப்பட்ட தந்தையை தேடி அழைகிறார். அதே சமயம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார் பீமராசுவாக வரும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் சந்திக்கும் புள்ளியே பகாசுரன் திரைப்படம்.

இந்த படத்திற்கு இசையமைத்த சாம் சி எஸ் இசை நாற்றாகவே படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. அது போல பின்னணி இசையும் பிரமாதம். ஆனால் படத்தில் முதலில் வரும் பாடல் என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்ற பாடல் திரையரங்குகளை அதிரவிட்டது ஈசனின் பாடல் அது.

படத்தில் சில பிற்போக்கான வசனங்கள் இருந்தாலும் படத்தின் முதல் பாதி ஓகே என்று கூறலாம். இரண்டாம் பாதி பரவாயில்லை என்று கூறலாம்.

தந்தை மகள் பாசம் பாடல் வருகிறது. இப்பாடல்  அனைத்து தந்தைமார்களுக்கும் சமர்ப்பணம் என்று கூறலாம் மிக அற்புதமான பாடல் இது தந்தைக்கும் மகளுக்கும்.

குறிப்பாக ஓய்வு பெற்ற மேஜர் நட்டி ஆதாரங்களை தேடி அழையும் போது தொடர்ந்து கொலைகளை செய்து விட்டு செல்கிறார் செல்வராகவன்.

மோகன் ஜி இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் பெரும் பேசுபொருளாக்கி இருக்கிறது. அதிலும் திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை டார்கெட் படங்கள் போலவே இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது தவறு, செல்போன் பயன்படுத்தினால் தவறு, அறிவில் கண்டுபிடிப்புகளையும் ஆபத்தானது என்பது போல காட்சிப்படுத்தி இருக்கிறார்.

சென்னையில் வாழ்பவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்களாக மாறிவிட்டதாக வரும் வசனம் ஆகட்டும், ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியதுதானே என்ற வசனம் ஆகட்டும். நம்ம பிள்ளைங்க ரூமுக்குள்ள என்ன ஆகட்டும். என்பதை கண்காணிக்க வேண்டும் போன்ற வசனங்களாக இருக்கட்டும், இப்படியான வசனங்களை வைத்தே இந்த படம் எப்படியான கருத்தை சொல்ல வந்து இருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஆக மொத்தத்தில் இப்படம் செல்வராகவன் நடிப்பு பிரமாதம் ஒரு தந்தையாக வாழ்ந்திருக்கிறார் மேஜர் நட்டி கதாபாத்திரம் மிக அற்புதம் கே ராஜன் மற்றும் ராதாரவியின் கதாபாத்திரம் நன்றாக உள்ளன.

பகாசூரன் மகாபாரதத்தின் பீமன் என்று கூறலாம் அனைவரும் பார்க்கக்கூடிய படம்.

Rating: 3.5 / 5



கருத்துகள் இல்லை