சற்று முன்



அயோத்தி திரை விமர்சனம் !


அயோத்தி”. இப்படத்தை டிரைன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்க இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியிருக்கிறார். நடிகர் சசிகுமார் நடிப்பில் மேலும் பிரியா அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா, புகழ் என பலர் நடித்திருக்கும் இப்படம் நேற்று என நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வட இந்தியாவில் அயோத்தியில் இருந்து ஒரு குடும்பம் தீபாவளி அன்று புனித யாத்திரைக்காக குடும்பத்துடன் ராமேஷ்வரம் வருகிறது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு டாக்ஸியில் வரும் போது இருந்து சர்மாவின் பொறுப்பில்லாத தனத்தினால் பெரிய விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் அவரது மனைவி பெரும் காயமடைந்து இறந்து விடுகிறார். இந்நிலையில் மொழி தெரியாத இடத்தில் அந்த தன்னுடைய மனைவியின் உடலை போஸ்ட் மாட்டம் செய்யக்கூடாது என சண்டை போடுறார் யஷ்பால் ஷர்மா என்கிற கதாபாத்திரத்தில் இருக்கும் பல்ராம். இந்நிலையில் தற்செயலாக வரும் சசிகுமார் இறந்து போன பல்ராமின் சடலத்தை காசிக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்யும்போது அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அந்த பெண்ணின் உடல் காசிக்கு என்றதால்? இல்லையா? என்பதுதான் மீதி கதை.

பொதுவாக அடிதடி, சண்டை, அண்ணன் தம்பி பாசம், சொந்தங்களில் துரோகம், நண்பர்களின் துரோகம் என்று இல்லாமல் மூன்றிலும் மாறுபட்ட கதையில் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை கதையில் படத்தின் மூலம் கொடுத்திருக்கிறது சசிக்குமார், மந்திரமூர்த்தி கூட்டணி. தன்னுடைய மனைவி மரணத்தின் போது கூட பாசமற்ற முரட்டுத்தனமான, கோபக்காரனாக இருக்கிறார் பல்ராம். படத்தின் நாயகனாக வரும் சசிகுமார் நடித்த மிக முக்கியமான சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என சொல்லலாம். அந்த அளவிற்கு கதையின் நாயகனாக நடித்திருந்தார்.

அதுவும் தமிழ் படத்தில் ஹிந்தி மொழி பேசும் கதாபாத்திரத்தை படம் முழுவதும் வைத்து இயக்குவது என்பது சாதாரண காரியம் கிடையாது. அதே போல அவற்றினை தமிழ் கிடையாது. ஏற்றுக்கொள்வார்களா? என்பதும் சந்தேகம் தான். ஆனால் கதையின் மீது நம்பிக்கை வைத்து இயக்கிய மந்திரமூர்த்திக்கு பாராட்டுகள். கடத்தல் யஷ்பால் மகளாக வரும் அஸ்ரானி நடிப்பு மிகச்சிறப்பாகவே இருந்தது. கதைக்கும் தேவையானவற்றை கதிதமாகவும் உணர்வு பூர்வமாகவும் நடித்திருந்தார் நடிகை அஸ்ரானி. அது போல புகழ் எப்போதும் போல காமெடி கதாபாத்திரமாக இறக்காமல் சசிகுமாருடன் இணைந்து நடித்திருக்கிறார்.

பின்னணி இசையில் என்.ஆர்.ரகுநந்தன் சிறப்பான இசையையே கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மாணிக்கம் படத்திற்கு தேவயானவற்றை செய்திருக்கிறார். படம் இரண்டு மணிநேரம் இருந்தாலும் பரபரப்பு குறையாமல் பார்வையாளர்களை திரையயை பார்க்க வைத்து. படம் நன்றாக இருந்தாலும் . நாம் லாஜிக் உடன் பார்க்காமல் உணர்வு பூர்வமாக பார்க்க வேண்டும் இப்படத்தை.

 அதே போல வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டில் ஆங்கிலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. அதன் சமயத்தில் பல்ராம் மகளாக வரும் அஸ்ரானி ஏன் ஆங்கிலத்தில் பேசவில்லை என்பது கேள்விக்குறிதான். அதே போல பல்ராமின் மனைவி, மற்றும் மகனாக வருபவர்கள் நடிப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. சில இடங்களில் சினிமா தன்மை இருந்தாலும் சுவாரசியமான திரைக்கதை அதனை மறைந்துள்ளது.

சசிகுமார் நடிப்பு பிரமாதம். பின்னணி இசையில் கலங்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். கதைக்கரு சூப்பர். சொல்லவந்த கருத்து தற்போது உள்ள சூழ்நிலைக்கு மிகவும் தேவையானது. மொத்தத்தில் “அயோத்தி” மதம் கடந்து மனிதத்தை மொத்தத்தில் ஆயிரத்தில் ஒரு படம். 

சசிகுமாருக்கு சுந்தர பாண்டியன் படத்திற்கு அப்புறம் ஒரு கம்பேக்காக உள்ளது என்று கூறலாம்.

நாம் அவரை ஒரே கதாபாத்திரத்தில் பார்த்துள்ளோம். இப்படத்தில் புதிய சசிகுமாரை நாம் பார்த்துள்ளோம். 

சசிகுமாரை பார்த்து அஸ்ராணி அந்த பெண்  கையெடுத்து கும்பிட்டு ஹிந்தியில் கேட்பார் ஆனாலும் சசிகுமார் உணவுப்பூர்வமாக அவர் பேசுவது எனக்கு புரியவில்லை ஆனாலும் உதவி கேட்கிறார் என்று உணர்ந்து ஒரு மனிதனாக வாழ்ந்துள்ளார் இப்படத்தில்.

 பின்னணி இசையில் கலங்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். கதைக்கரு சூப்பர். சொல்லவந்த கருத்து தற்போது உள்ள சூழ்நிலைக்கு மிகவும் தேவையானது. மொத்தத்தில் “அயோத்தி” மதம் கடந்து மனிதத்தை மொத்தத்தில் uஆயிரத்தில் ஒரு படம். 

கிளைமாக்ஸ் காட்சியில் சசிகுமாரை பார்த்து உன் பெயர் என்ன என்று கேட்கும் போது அவர் கூறும் என் பெயர் அப்துல் என்று கூறி அந்த பல்ராம் அவரைக் கட்டி அணைப்பது நம்மை கண்களை  கலங்கவைக்கும் காட்சி. 

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படம்.

இப்படம் மதர் சார்பற்ற ஒரு தரமான படம் அனைவரும் ஒரு இந்தியன் என்று உணரலாம். 

ஆக மொத்தத்தில் இப்படம் ஒரு இந்தியன் ஆக வெற்றி பெற வேண்டும். மதசார்பற்ற படம் மற்றும் அனைவரும் ஒன்றுதான் என்று உணர வைக்கிறது .

நம் சமுதாயத்திற்கு தேவையான படம்.

Rating: 4.5  / 5


கருத்துகள் இல்லை