சற்று முன்



நியூசிலாந்து கல்வி வாரம், இந்திய திட்ட நெறிமுறையின் ஒரு பகுதியாக NZ$ 400,000 மதிப்பிலான முதலீட்டிற்கான பொறுப்பை ஏற்கிறது !

 

நியூசிலாந்து கல்வி வாரம், இந்திய திட்ட நெறிமுறையின் ஒரு பகுதியாக NZ$ 400,000 மதிப்பிலான முதலீட்டிற்கான  பொறுப்பை ஏற்கிறது

எஜிகேஷன் நியூசிலாந்து- ஊடக வெளியீடு

20 ஏப்ரல் 2023: எஜிகேஷன் நியூசிலாந்தின் இந்தைய ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான இந்தியா-நியூசிலாந்து கல்வி வாரத்தைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கல்வி உறவுகள் வலுப்பெற உள்ளன. ஏப்ரல் 17, 2023 முதல், இந்த வாரம் சர்வதேச கல்வியின் சூழலில் புதுமை கலாச்சார பரிமாற்றத்தை வளர்த்து, ஒத்துழைப்பை மேம்படுத்தும் அதே வேளையில் ஆராய்ச்சி பற்றிய உரையாடலை ஊக்குவிக்கும். ஒரு வார கால நிகழ்வுகளில் நியூசிலாந்து மற்றும் இந்திய நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையேயான தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் அடங்கும்.

இந்தியாவிற்கான நியூசிலாந்தின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், நியூசிலாந்து சர்வதேசமயமாக்கல் மற்றும் மாணவர் இயக்க  முயற்சிகளுக்காக  NZ$ 400K முதலீட்டை அறிவித்துள்ளது.  இதில், கூட்டுறவு மானியங்கள் மற்றும் நியூசிலாந்து எக்ஸலன்ஸ் விருதுகளின் கீழ் பகுதியளவு மானியங்களை மீண்டும் தொடங்குவது ஆகியவை அடங்கும்.

நியூசிலாந்து எக்ஸலன்ஸ் அவார்டு (NZEA) என்பது இந்திய மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான மானியத் திட்டமாகும். கல்வி நியூசிலாந்து மற்றும் அனைத்து எட்டு நியூசிலாந்து பல்கலைக்கழகங்களால் கூட்டாக விருதுகளுக்காக நிதியளிக்கப்படுகின்றன. 2016 இல் உதவித்தொகை செயல்படுத்தப்பட்டதிலிருந்து  இது, நியூசிலாந்தில் உள்ள உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் 200 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டுப் படிப்பைத் தொடர ஆதரவளித்துள்ளது.

வைகாடோ பல்கலைக்கழகம்; மூத்த துணைவேந்தர், எல்-ஆர்: அலிஸ்டர் ஜோன்ஸ், இந்தியாவுக்கான நியூசிலாந்து உயர் ஆணையர்; HE டேவிட் பைன், எஜிகேஷன்  நியூசிலாந்து; தலைமை நிர்வாகி, கிராண்ட் மெக்பெர்சன், ஸ்டெடீஜிக் என்கேஜ்மெண்ட், ஆக்லாந்து பல்கலைக்கழகம், துணை வேந்தர், எரிக் லிதாண்டர்,

நிகழ்வில் பேசிய எஜிகேஷன் நியூசிலாந்தின் தலைமை நிர்வாகி கிராண்ட் மெக்பெர்சன், "நியூசிலாந்தின் கல்வி முறை எதிர்காலத்தின் மீது  கவனம் செலுத்துவதுடன், பன்முக கலாச்சாரம் கொண்ட மாணவர்கள் தங்களை  வேலைக்கு  தயார்படுத்திக்கொள்வதற்கான பட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது." என்று கூறினார்.

 “ஒத்துழைப்பு, பரிமாற்றங்கள் மற்றும் மாணவர்களின் வருகை  ஆகியவற்றில் நியூசிலாந்தின் முன்னுரிமை கூட்டாளர் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். நியூசிலாந்து மையத்தைப் பற்றிய இன்றைய அறிவிப்புகள் மற்றும் நியூசிலாந்து எக்ஸலன்ஸ் விருதுக்கான உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியீடு ஆகியவை கல்வி கூட்டாளிகள் என்ற முறையில் இந்தியாவிற்கான எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மேலும், ஐஐடி டெல்லி செய்தித் தொடர்பாளர் பேராசிரியர். ஜேம்ஸ் கோம்ஸ், டீன் இன்டர்நேஷனல் மேலும் கூறியதாவது, "நியூசிலாந்து மையம், புதிய ஆராய்ச்சிகளுக்கான ஒத்துழைப்பு மற்றும் எங்கள் மாணவர்கள்  உலகளாவிய  அளவில் அறியப்படுவதற்கான வாய்ப்புகளை வழங்குவது போன்றவற்றில்  சர்வதேசமயமாக்கலைத் தழுவுவதற்கான ஐஐடி டெல்லியின் முயற்சிகளை உள்ளடக்கியது. 2022 இல் வழங்கப்பட்ட கூட்டு நிதியுதவி ஆராய்ச்சி கூட்டுறவின் முதல் சுற்றானது, ஒத்துழைப்பை வளர்ப்பது, நிலைத்தன்மை மற்றும் சுய-ஆதரவு ஆராய்ச்சி திட்டங்களை வளர்க்க உதவியது.

"இன்று மேற்கொள்ளப்பட்ட  புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் கூட்டுறவு ஆகியவற்றில் கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தியுள்ளதுடன் பிற புதுமையான முயற்சிகளை ஆராய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது" என்று பேராசிரியர் கோம்ஸ் கூறினார்.

நியூசிலாந்து ஹை கமிஷனில்,  HE. டேவிட் பைன், இந்தியாவிற்கான நியூசிலாந்து உயர் ஆணையர், கிராண்ட் மெக்பெர்சன், எஜிகேஷன்  நியூசிலாந்து தலைமை நிர்வாகி; பேராசிரியர். அலிஸ்டர் ஜோன்ஸ், வைகாடோ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், ஆக்லாந்தின் ஸ்டெடீஜிக் என்கேஜ்மெண்ட் பல்கலைக்கழகத்தின் மூத்த துணைவேந்தர் மற்றும் டாக்டர் எரிக் லிதாண்டர் ஆகியோர்  முன்னிலையில்  நடைபெற்ற ஊடக வட்டமேசை அமர்வில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன:

இந்தியா-நியூசிலாந்து கல்வி வாரம் நியூசிலாந்தில் உள்ள அனைத்து 8 பல்கலைக்கழகங்களிலிருந்தும் உயர் மட்ட அளவிளான வருகையைக் பெற்றுள்ளதுடன், நியூசிலாந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள், கூட்டாளர்கள் ஆகியோருக்கிடையேயான உயர் மட்ட ஒப்பந்தத்தின் மீது கவனம் செலுத்துகிறது.

நியூசிலாந்து பல்கலைக்கழகங்களில் இருந்து வருகை தரும் மூத்த பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள்:

கை லிட்டில்ஃபேர், இணை துணைவேந்தர், ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம்.

அன்னி கோ, சர்வதேச இயக்குனர், லிங்கன் பல்கலைக்கழகம்

கிறிஸ்டோபர் கான், லிங்கன் பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் வணிக அமைப்பின் துறைத் தலைவர்

கிறிஸ்டோபர் கேரி, நிர்வாக இயக்குனர் குளோபல் எங்கேஜ்மென்ட், மாஸ்ஸி பல்கலைக்கழகம்

 கவுரப் சென் குப்தா, துணை HOD ஃபுட் & அட்வான்ஸ்டு டெக்னாலஜி, மாஸ்ஸி பல்கலைக்கழகம்

 எரிக் லிதாண்டர், துணை வேந்தர், ஆக்லாந்தின் ஸ்டெடீஜிக் என்கேஜ்மெண்ட் பல்கலைக்கழகம்

அலிஸ்டர் ஜோன்ஸ், மூத்த துணைவேந்தர், வைகாடோ பல்கலைக்கழகம்

கிரஹாம் வைஸ், சர்வதேச வளர்ச்சி இயக்குனர், கேன்டர்பரி பல்கலைக்கழகம்

அந்தோணி  பாலண்டின், துணை வேந்தர், ஒடாகோ பல்கலைக்கழகம்

பிளேர் மெக்ரே, வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்

வாசோ கௌன்ட்சோஸ், துணை இயக்குனர் சர்வதேச சந்தைப்படுத்தல் & ஆக்லாந்தின் ரெக்ரூட்டிங்  பல்கலைக்கழகம்

அனைத்து நியூசிலாந்து பல்கலைக்கழகங்களிலும் இந்தியாவைச் சேர்ந்த/பொறுப்பிலுள்ள பணியாளர்கள் உள்ளனர். அவர்களும் NZ-இந்தியா வாரத்தில் தூதுக்குழுவுடன் வருகிறார்கள்.  இதில் பின்உள்ளவர்கள் அடங்குவர்:

பாத்திமா சயீத்-நக்வி, ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ரெக்ரூட்டிங் மேலாளர்

லிண்டா  ஊஸ்டென்ரிஜ்  ஆட்சேர்ப்பு மேலாளர், மாஸ்ஸி பல்கலைக்கழகம்

ஆஷிஷ் சூரி, ரெக்ரூட்டிங் மேலாளர், வைகாடோ பல்கலைக்கழகம்

முகமது உசேன், கேன்டர்பரி பல்கலைக்கழகம்

விக்டோரியா எம்சி என்க்ரி, ஒடாகோ பல்கலைக்கழகம்

அங்கித் மேத்தா, வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்.


கருத்துகள் இல்லை