சற்று முன்



அழகிய கண்ணே திரை விமர்சனம் !

அறிமுக இயக்குனர் ஆர் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அழகிய கண்ணே. இந்த படத்தை எஸ்தெல் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ சிவகுமார் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் பிரபு சாலமன், நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு என் ஆர் ரகுநாதன் இசை அமைத்திருக்கிறார்.  வெளியாகி இருக்கும் அழகிய கண்ணே படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லியோ சிவகுமாருக்கு சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இதனால் இவர் ஊரில் பல நாடகங்களை நடத்தி வருகிறார். அதிலும் இவரின் புரட்சி நாடகங்கள் சிறப்பாக இருக்கிறது. இதனால் இவர் மீது கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி காதல் கொள்கிறார். இருந்தாலும் இவர் தன்னுடைய லட்சியத்திற்காக போராடுகிறார். இதனால் இவர் இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேருகிறார்.

இன்னொரு பக்கம் கதாநாயகி சஞ்சிதாவும் வேலை காரணமாக சென்னைக்கு செல்கிறார். ஒரு கட்டத்தில் பல எதிர்ப்புகளை தாண்டி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு குழந்தையும் பிரிக்கிறது. ஆனால், லியோ சிவக்குமார் இயக்குனர் ஆக வேண்டும் என்பதால் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியாமல் போகிறது. இறுதியில் லியோ சிவக்குமார் தன்னுடைய லட்சியப்படி இயக்குனர் ஆனாரா? சஞ்சிதாவின் ஆசையையும் குடும்ப பொறுப்பையும் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை.

இந்த படத்தின் மூலம் லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். சஞ்சிதா, சுஜாதா ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஆனால், லியோ சிவக்குமார் நன்றாக நடித்துள்ளார். 

லியோ சிவகுமாரை பார்த்தால் நம்  பக்கத்து வீட்டு பையன் போல்தான் தோன்றுகிறது. அழகாக இருக்கிறார்.

பிரபு சாலமனின் நடிப்பு நன்றாக இருக்கிறது. சிறிது நேரம் வந்தாலும் எதார்த்தமாக நடித்துள்ளார்.

ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் விஜய் சேதுபதி வந்திருக்கிறார். படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமும்  இல்லை.  ஆனால், இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு முறையை பற்றி இயக்குனர் அழகாக சொல்லியிருப்பது சிறப்பு. அதேபோல் படம் ஆரம்பத்திலிருந்து முடியும்வரை யூகிக்கக்கூடிய காட்சிகளாகவே இருக்கிறது. வில்லன் கதாபாத்திரம் பெரிதளவு இல்லையென்றாலும் எதார்த்தமாக காட்டியுள்ளார் இயக்குனர். பின்னணி இசை நன்றாக இருக்கிறது. 

கிளைமாக்ஸ் காட்சியில் நம் மனதை தொட்டு விட்டன.

ஆக மொத்தத்தில் இத் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.


Rating : 3 / 5 


Marveltamilnews.com


கருத்துகள் இல்லை