சற்று முன்



கிங் ஆஃப் கொத்தா திரை விமர்சனம் !




நடிகர் துல்க்கர் சல்மான் நடிப்பில் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கிங் ஆஃப் கொத்தா. இந்த படத்தில் நடிகர் துல்க்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷபீர், பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். நிமிஷ் ரவி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் ஆங்கிலேயர்களின் காலகட்டத்தில் குற்றவாளிகளை கொடூரமாக சுட்டுத்தள்ளி தண்டனை வழங்கும் இடத்தை தான் கொத்தா என்று சொல்வார்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஆட்சிக்குப் மக்கள் அந்த இடத்தில் குடி பெயர்கிறார்கள். குற்றவாளிகளை தண்டிக்கும் இடமாக இருந்த கொத்தா குற்றவாளிகள் உடைய சாம்ராஜ்யமாகவே மாறிவிட்டது. அந்த இடத்தில் போதை பொருள் வியாபாரம் செய்கிறார்கள்.


இந்த இடம் கண்ணன் பாய் என்ற ரவுடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும், இந்த இடத்திற்கு புதிய காவல்துறை அதிகாரியாக பிரசன்னா வருகிறார். இவர் கண்ணன் பாய்  பற்றி அறிகிறார்.  பிரசன்னாவிற்கு கண்ணன் பாய் அராஜகத்தை எல்லாம் தெரிந்து கொள்கிறார். கண்ணன் பாய் பயப்படும் ஒரே ஆளாக துல்கர் சல்மானை பற்றியும் தெரிந்து கொள்கிறார் . பின் துல்கர் சல்மான் உடைய பிளாஷ்பேக் காண்பிக்கிறார்கள். பல வருட காலமாக ரவுடிசம் செய்யும் துல்கர் சல்மான் தன்னுடைய காதலிக்காக போதைப்பொருள் செய்யும் வேலை எல்லாம் நிறுத்திவிட்டு இருக்கிறார்.


ஆனால், அவருடைய காதலியும் நண்பரும் ஏமாற்றி விடுகிறார்கள். இதனால் மனமுடைந்த துல்கர் சல்மான் ஊரைவிட்டு வெளியேறுகிறார். இதை அறிந்த பிரசன்னா 

கண்ணன் பாய் அழிக்க திட்டமிடுகிறார். பிரசன்னா  திட்டம் நிறைவேறியதா? துல்கர் சல்மான் மீண்டும் கொத்தாவிற்கு அரசர் ஆனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கமான ஒரு ரொமான்டிக், ரவுடிசம் கதை இல்லாமல் இந்த படத்தில் துல்கர் கதாபாத்திரம் ரசிக்க வைத்திருக்கிறது.

படம் முழுக்க துல்கர் சல்மான் தாங்கி செல்கிறார் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் கதை விறுவிறுப்பாக நடைபெறும். இடையில் மெதுவாக செல்வது போல் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும்  பிஜிஎம்  அதோடு படத்தின் சண்டைக் காட்சிகள் எல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. பாட்ஷா, தளபதி, அஞ்சான் படங்களைப் போலவே இரு நண்பர்களுக்கு மத்தியில் ஏற்படும் சண்டை, காதல் கதையை தான் இந்த படத்திலும் இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

நைலா உஷா கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். மிக அழகாக உள்ளார். நைலா உஷாவுக்கு கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமியின் கதாபாத்திரமும் நன்றாக உள்ளது.

 நடிகை ரித்திகா சிங் ஒரு குத்து பாடல்  ஆடியுள்ளார்.

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்தாலும் இயக்குனர் அதை கொண்டு சென்ற செய்தாலும் இன்னும் கொஞ்சம் கவனத்தை செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். வழக்கமான கேங்ஸ்டர் கதைதான் மற்றபடி இதில் எந்த ஒரு சுவாரசியத்தையும் காண்பிக்கவில்லை. அதே போல் பிரசன்னாவினுடைய நடிப்பு சிறப்பாக இருந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் கம்பீரமாகவும்  காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். பின்னணி இசை நன்றாக உள்ளது. ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

இரண்டாம் பாதி பார்வையாளர்களை  சோதித்து இருக்கிறது.  சண்டைக் காட்சி ஆக்சன் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating: 3 / 5

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை