சற்று முன்



ஏலியனை வைத்து காமெடி செய்த அயலான் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான். மற்றும் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, ஈஷா கோபிகர், ஷரத் கேல்கர், கருணாகரன், பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இக்கதையினை ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முதல்முயற்சியாக ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசியுடன் கைகோர்த்து ஆடி, பாடி, சண்டையிட்டு தமிழ் சினிமாவுக்கு தேவையான அத்தனை கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெற, சிவகார்த்திகேயன் முயற்சித்துள்ளார். ஆனால் கை கொடுக்கவில்லை.


ஹாலிவுட்டில் ஈடி (The Extra Terrestrial), பாலிவுட்டில் கோய் மில் கயா (Koi Mil Gaya) என ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான தருணங்களைக் கொண்ட திரைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி க்ளாசிக் படங்களாக உருவெடுத்து முத்திரை பதித்துள்ளன. அந்த வரிசையில் கோலிவுட்டில் முதல் முயற்சியாகவும், “ஏலியன்” எனும் வெப்பனை கையில் எடுத்து தன் குழந்தைகள் ஆடியன்ஸ் பட்டாளத்தைக் குறிவைத்து சிக்ஸர் அடிக்கவும் முயற்சித்துள்ள நம்ம சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? என்பது கேள்விக்குறி தான் ?

கொடைக்கானலின் பூம்பாறை கிராமத்தில் புல், பூண்டு, பூச்சிக்கும் கேடு விளைவிக்காமல் இயற்கை ஆர்வலராக, பிழைக்கத் தெரியாத நபராக விவசாயம் செய்தபடி வலம் வரும் சிவகார்த்திகேயன், தன் அம்மாவின் கவலைக்கு மனமிறங்கி சென்னைக்கு சம்பாதிக்க வருகிறார்.

மற்றொருபுறம் பூமியின் அடுத்த தசாப்தத்தை ஆளப்போகும் எரிவாயு எனக் கூறி நோவா கேஸ், ஸ்பார்க் எனும் கனிமத்தை பூமியின் பல அடி ஆழத்துக்கு துளை போட்டு எடுக்க சென்னையைச் சேர்ந்த வில்லன் மற்றும் அவரது பெருநிறுவனம் சார்பில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு இடையே, மனிதர்களுடன் சண்டை போட்டு பூமியை அழிக்க வரும் ஹாலிவுட் பட ஏலியன்களுக்கு மாறாக, பூமியை வில்லன்கள் குழுவிடமிருந்து காப்பாற்ற  “ய்டூவூய்” எனும் உலகத்திலிருந்து பூமிக்கு வருகை தருகிறது படத்தின் ”ஹீரோ” ஏலியன்.

ஆனால், “பூமியின் மிக மோசமான உயிரினம் மனிதன், அவர்கள் கைகளில் மட்டும் சிக்கிவிடாதே” என தனக்கு கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரக்‌ஷன்களுக்கு மாறாக, தான் வந்த வேலையை முடித்த கையுடன், மனிதர்களுக்கு தன் சுவடுகளை விட்டுச் செல்வதோடு, தன் விண்கலத்தையும் சக்திவாய்ந்த வில்லன் குழுவிடம் பறிகொடுக்கிறது ஏலியன்.

இதனிடையே சிவகார்த்திகேயனுக்கு பயம் காண்பித்து அறிமுகமாகி,  அவரது நண்பர்கள் குழுவில் ஐக்கியமாகும் ஏலியன், தன் விண்கலத்தை வில்லன்கள் குழுவிடமிருந்து எப்படி மீட்டது, சிறு கிராமத்தில் இருந்து வந்த சிவகார்த்திகேயனுக்கும் ஏலியனுக்கும் உள்ள தொடர்பு என்ன, ஏலியன் பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறியதா எனும் கேள்விகளுக்கான விடைகளை தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அம்சங்களுடன் சேர்த்து முயற்சித்திருக்கிறார்கள். 

வில்லன்கள் படையில் ஷரத் கேல்கர், ஈஷா கோபிகர் கவனிக்க வைக்கின்றனர்.  ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்ற இடங்களில் ஆர்வமூட்டவில்லை..  ஷங்கரின் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் மேஜிக் செய்யும் ரஹ்மான், அயலானில் மிஸ்ஸிங்! ஏ ஆர் ரகுமானின் இசை இப்படத்தில் கை கொடுக்கவில்லை.

பாடல்களும் பெரிதாக இல்லை.

பின்னணி இசை சுமார்தான்.

பிளாஸ்டிக்.. இது மக்க 300 வருஷமாகும்”, “பூமியின் மிக மோசமான உயிரினம் மனிதர்கள்”  என அறிவியல் மற்றும் அவல நகைச்சுவை கலந்து ஏலியனை மையப்படுத்திய வசனங்கள் ஆங்காங்கே ஈர்க்கின்றன.  வளவளவெனப் பேசும் ஏலியனின் பேச்சைக் குறைத்து இருக்கலாம்.

கடுப்பானவை உண்டு  ஏலியன் பேசுகையில்.

முதல் பாதி எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இரண்டாம் பாதி நம்மை ஒன்ற வைக்க மறுத்து, ஏலியன் ட்ராக்கிலிருந்து மாறி வழக்கமான “உலகத்தைக் காப்பாற்றப் போராடும் ஹீரோ” ஜானர் கதைக்குள் சென்று விடுகிறது.  ஏலியனுடன் அதகளமாகத் தொடங்கி திசைமாறி சென்று சூப்பர் ஹீரோ கதை எனும் சுழலில் படம் மொத்தமாக சிக்கி விடுகிறது.

இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மக்களுக்கு குழப்பத்துடன் கூறியுள்ளார்.

 மக்கள் மிக எதிர்பார்ப்புகளுடன் போனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே. 

சிவகார்த்திகேயனுக்கு இந்த பொங்கலும் கை கொடுக்கவில்லை என்று கூறலாம்

சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை ஏலியனை வைத்து காமெடி செய்துள்ளனர்.

இத்திரைப்படத்தை ஹாலிவுட் ரசிகர்கள் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் யார் பார்த்தாலும் சிரித்து விடுவார்கள் ஏலியனை வைத்து காமெடி செய்துள்ளார் என்று. 

இத்திரைப்படம் குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்காக அமையும். 

மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக அமைந்துள்ளது.

Rating : 2.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை