சற்று முன்



சிறகன் திரை விமர்சனம் !


 தமிழ் சினிமா உலகில் பொதுமுக நடிகர் நடிகைகள் நடிப்பில் சிறகன்’. 

நடிகர்  கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தை இயக்கியுள்ளார் S .வெங்கடேஷ்வராஜ். 

MAD ஃபிலிம்ஸ்’  நிறுவனம் சார்பில், துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள படம்

 பட்டாம்பூச்சி இனம், கயாஸ் தியரி (Chaos theory), ஹைபர் லிங்க் நான் லீனியர், ஒரே இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லர், 11 கோணங்களில் திரைக்கதை, அனிமேஷன் என, கதைக்கு தேவைப்படாத விஷயங்களை திணித்து ‘சிறகன்’ திரைக்கதையினை உருவாக்கியிருக்கிறார், இயக்குநர், S .வெங்கடேஷ்வராஜ்.  அது ரசிக்கும்படி இருக்கிறதா? பார்க்கலாம்..

சிறகன் என்பது பட்டாம்பூச்சியினத்தின், ஒரு வகை பெயரினை குறிக்கும். பெரும்பாலும் சிறகன் என மட்டுமே அழைக்கப்படுவதில்லை. உதாரணமாக புதர் சிறகன், பனைச் சிறகன் என அழைக்கப்படும். மேலும், கத்திவால் அழகி, ஐம்பட்டை கத்திவால் அழகி,மரகத அழகி என பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சியினங்கள் இந்தியாவில் உண்டு. இதில் ‘பனைச் சிறகன்’ பட்டாம்பூச்சியை, அதன் மேல் காணப்படும் நிறங்களைக் கொண்டு, தன்னுடைய கதையுடன் பொருத்தியிருக்கிறார். இதன் மேல் பக்கம் கருப்பு இறக்கையின் ஓரத்தில் வெள்ளைக்கோடுகள் இருக்கும், கீழ்புறத்தில் காக்கி கலரில் இருக்கும். அதாவது, கருப்பு மற்றும் வெள்ளை மனதினை கொண்ட மனிதர்கள். அவர்களுக்குள் நிகழும் சம்பவம், அதைத் தொடர்ந்து நடைபெறும் போலீஸின் புலன் விசாரணை. இதுவே சிறகன்.

அரசியல் பெரும்புள்ளி ஜீவா ரவி, தனது மகனை காணாமல் போலீஸாரிடம், கெடுபிடி செய்து தேடச்சொல்லி நிர்பந்திக்கிறார். அதே இரவு நேரம், தனியாக இருக்கும் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து, அரசு வழக்கறிஞர், கஜராஜை ஒரு கும்பல் கொலை செய்ய துரத்தி வருகிறது. அதே சமயத்தில், அரசியல் பெரும்புள்ளி ஜீவா ரவியை கொலை செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து போலீஸ் புலன் விசாரணை செய்கிறது. நடந்தது, என்ன? என்பதே, சிறகன் படத்தின் கதை

திரைக்கதையை மிக அற்புதமாக இயக்குனர் காண்பித்துள்ளார்.

சஸ்பென்ஸ் திரில்லர் படமாக திரைப்படம் அமைந்துள்ளது.

காதல், அண்ணன் தங்கை பாசம் ,கணவன் மனைவி உறவு அனைத்தும் திரைப்படத்தில் அமைந்துள்ளது.

பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க கூடாது என்பது உதாரணமும் திரைப்படத்தில் காண்பித்துள்ளார் இயக்குனர்.

காவல்துறையை அதிகாரியாக வரும் கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது.

தன் மகளுக்காக தந்தை போராடும் கதாபாத்திரமும் சிறப்பு.

திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை