சற்று முன்



தலைக்கூத்தல் திரைவிமர்சனம் !


தமிழகத்தில் விருதுநகர் பகுதிகளில் நடந்த நடந்து கொண்டிருக்கும் கொடூரமான ஒரு நிகழ்வுதான் இந்த தலைக்கூத்தல்.

அந்த காலத்தில் முன்பு தமிழ்நாட்டில் தென்பகுதி மாவட்டங்களில் வழக்கத்தில் இருந்த தலைக்கூத்தல் வயது முதியவர்களை கருணை கொலை செய்யும் ‘தலைக்கூத்தல்’ என்கிற கதையை மையமாக வைத்து இந்த தலைக்கூத்தல் திரைப்படத்தை இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

தனியார் பேங்க் ஏ.டி.எமில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்   சமுத்திரக்கனி.

நாயகன் சமுத்திரக்கனியின் மனைவியாக  நாயகி வசுந்தரா.

 சமுத்திரக்கனி வசுந்தரா இருவருக்கும் ஒரு மகள் மற்றும் கதையின் நாயகன் சமுத்திரக்கனியின் மரண படுக்கையில் வயதான தந்தை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.


சமுத்திரக்கனியின் தந்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் பாரமாக தோன்றுகிறார்.

 சமுத்திரகனியின் தந்தையை கொல்வதற்கு மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள்.

ஆனால் பாசத் தந்தையை அநியாயமாக கொலை செய்வதற்கு சம்மதிக்காமல்  சமுத்திரக்கனி துடிக்கிறார்.

தன் மனைவிக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தன் தந்தைக்கு மருத்துவத்திற்கு செலவு செய்கிறார்.

 சமுத்திரக்கனிக்கு கடன் கொடுத்தவர் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொள்ள திட்டமிடுகிறார்.

ஏற்கனவே தந்தையை காரணம் காட்டி  சமுத்திரக்கனியிடம் வம்பு இழுத்த மனைவி கடன் வாங்கிய விஷயம் தெரிந்ததும் மேலும் அதிகமாக சண்டை போடுகிறார்.

 சமுத்திரக்கனியால் மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த முடிந்ததா? முடியவில்லையா? உயிர் ஊசலாடும்  சமுத்திரக்கனியின் தந்தை உயிரை காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? என்பதுதான் இந்த தலைக்கூத்தல் திரைப்படத்தின் மீதி கதை.

தன்னை பெற்ற தந்தைக்கு பாசமான மகனாகவும் தான் தாலி கட்டிய மனைவி அவமானப்படுத்துவதை தாங்கும் மிகவும் அமைதியான கணவனாகவும், தன் பெற்ற அன்பு மகளை அரவணைக்கும் பாசமான தந்தையாகவும் தனது மிக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார் சமுத்திரக்கனி

இன்னொரு பக்கம் நடித்த கதாபாத்திரமாகவே மாறிப் இருக்கிறார் வசுந்தரா. வசுந்தராவின் நடிப்பு பிரமாதம் இயல்பாக நடித்துள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் சண்டை, கோபம், அன்பு என அனைத்தையும் வசுந்தரா அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 சமுத்திரக்கனி தந்தையின் இளம் வயது பிளாஷ்பேக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.

கதிரின் கெட்டப், ஹேர் ஸ்டைல், நடிப்பு என எல்லா விதத்திலும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். கதிரின் நடிப்பு பிரமாதம். அவர் படங்களில் இது ஒரு வித்தியாசமான அனுபவம் கதிர் ரசிகர்களுக்கு. கதிர்ன் காதல் காட்சிகள் நம் மனதை தொட்டுவிட்டன. காதலி ஆரம்பத்தில் நம்பாவிட்டாலும் இறுதியில் நம்புவார் ஆனாலும் இச்சமூகத்தின் சில காரணங்களினால் இருவரும் பிரிகின்றனர் நம் மனதை தொட்டுவிட்டது அந்த காதல் காட்சிகள்.

அவருடைய காதலியாக வரும் கத்தா நந்தி சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

திரைப்படம் முழுவதும் படுத்துக்கொண்டே திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை உருக வைத்து விட்டார் கலைச் செல்வன். சமுத்திரக்கனியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி, சமுத்திரக்கனியின் நண்பராக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், வசுந்தராவின் தந்தையாக நடித்திருக்கும் பெரியவர் ஊருக்குள் குறி சொல்லும் திருநங்கை வையாபுரி என திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், மிகச் அருமையாகவும் சரியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

திரைப்படத்தின் உணர்வுகளை இசையின் மூலம் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு கவனிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன்.

கிராமத்து அழகை மிக அற்புதமாகவும அருமையாகவும் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மார்டின் டான் ராஜ்.

அப்படி ஒரு நிகழ்வையும் வாழ்க்கையும் வேதனையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் .

கிராமத்தில் நடக்கும் தலைக்கூத்தல் விஷயங்களை பதிவு செய்த  இயக்குனர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணனு பாராட்டுக்கள்.

 சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து மனதை தொடும் அழுத்தமான திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

அனைவரும் சிறியவர் முதல் பெரியவர் வரை பார்க்கக்கூடிய தரமான படம் !

மொத்தத்தில் தலைக்கூத்தல் – திரைப்படம்  மனிதர்களின் உணர்வு. பெற்ற தாய் தந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்தான் தலைக்கூத்தல். ஆனாலும் இச்சமூகம் விடவில்லை.

Rating : 3.5 /5







கருத்துகள் இல்லை