சற்று முன்



பிரசாந்த் மருத்துவமனைகளில் ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாட்டம் !


பிரசாந்த் மருத்துவமனைகளில் ‘உலக தாய்ப்பால் வாரம்’  கொண்டாட்டம்  !

தாய்ப்பாலின் பயன் குறித்து வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துல் 

தாய்ப்பாலூட்டுதல், அது தொடர்பான நுணுக்கங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ள ஒரு வார கால நிகழ்ச்சி

நிபுணத்துவமிக்க பேச்சாளர்களின் சிறப்புரை, பயிற்சி பட்டறைகள், வினாடி வினா போட்டி, சமையல் போட்டி, குறும்படப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன

சென்னை, ஆக.7,2023:உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தை கடைபிடிப்பதன் காரணமாக இது சமுதாயத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதை வலியுறுத்தும் விதமாக சென்னையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனைகளில் 'தாய்ப்பால் ஊட்டுவதை வலியுறுத்துதல்–வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு வித்தியாசத்தை ஏற்படுத்துதல்' என்ற தலைப்பில் ஒரு வாரகால விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தாய்ப்பால் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் இறுதிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும், மேலும் இதில் கலந்து கொண்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக தமிழக உதவி போலீஸ் கமிஷனர் ஷர்மு ராஜன், திரைப்பட இயக்குனர் ரா கார்த்திக், பிரசாந்த் குழும மருத்துவமனைகளின் தலைவர் கீதா ஹரிபிரியா உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

ஒரு வாரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேலைக்கு செல்லும் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கு தாய்ப்பாலின் நன்மை, அதனால் கிடைக்கும் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்து கூறும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற பயிற்சி பட்டறைகளும், தாய்ப்பாலூட்டுவது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் மூத்த மகப்பேறு மருத்துவர்கள், பாலூட்டுவது தொடர்பான ஆலோசகர்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட அமர்வுகளும் இடம் பெற்றன. இதில் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு தாய்ப்பாலூட்டும் முறைகள் பற்றியும், அதன் பலன்கள் குறித்தும், அது தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் தவறான எண்ணங்கள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறுப்பட்டது.

 அத்துடன் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான சத்தான உணவுகள், தாய்ப்பால் சேமிப்பு, அத்துடன் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது வேலை பொறுப்புகளை நிர்வகிப்பதற்கான முறைகள் உள்ளிட்டவை குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தாய்ப்பாலை தானம் செய்வதற்கான சிறந்த நடைமுறைகள், தேவைப்படும் பிற குழந்தைகளுக்கு அதை பகிர்ந்துகொள்வது தொடர்பாகவும், அதை ஆதரிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், குறிப்பாக ரங்கோலி போட்டிகள், வினாடி வினா, விளக்கக்காட்சிகள், ஊட்டச்சத்து சமையல் போட்டிகள் மற்றும் குறும்படக் காட்சிகள் ஆகியவை இடம் பெற்றன.

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய பிரசாந்த் குழும மருத்துவமனைகளின் தலைவர் கீதா ஹரிபிரியா கூறுகையில், உலக தாய்ப்பால் வாரத்தில் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு பயனுள்ள நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஏற்பாடு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு என்பது முழு குடும்பத்தின் கூட்டு முயற்சியை சார்ந்து உள்ளது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழு தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் வழிகாட்டியதோடு, அவர்கள் வெற்றிகரமான பாலூட்டுதல் மற்றும் குழந்தைகளை சிறப்பாக கவனித்துக் கொள்வது குறித்தும் எடுத்துக் கூறியது என்று தெரிவித்தார். 

பிரசாந்த் மருத்துவமனைகளின் குழந்தை மருத்துவ துறைத் தலைவர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறு தவறான எண்ணங்கள் இன்று பல பெண்களிடம் நிலவுகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் தாய்மார்களிடமும், புதிதாக குழந்தை பெற்றவர்களிடமும் அது அதிக அளவில் காணப்படுகிறது. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எங்களின் இந்த ஒரு வார கால நிகழ்ச்சி நடைபெற்றது. இளம் பெற்றோருக்கு தாய்பாலின் மகத்துவம் குறித்தும், தாய்ப்பால் கொடுப்பதால் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விரிவாக இந்த நிகழ்ச்சி மூலம் வலியுறுத்தி கூறப்பட்டது. இது தொடர்புடைய பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்ற அமர்வுகளும் நடைபெற்றன. இதன் காரணமாக தாய்ப்பாலூட்டுவது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டதோடு, முழு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் சிறந்ததொரு நிகழ்ச்சியாக இது அமைந்தது என்று தெரிவித்தார்.

பிரசாந்த் மருத்துவமனையின் உலக தாய்ப்பால் வாரக் கொண்டாட்டம், வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு பயனுள்ள ஒன்றாக அமைந்ததோடு, தாய்ப்பாலின் மகத்துவம் மற்றும் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைக்கும் பயன்கள் குறித்தும், தாய்ப்பால் கொடுக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது. தாய்ப்பாலூட்டுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதிலும் பெற்றோர்களை ஊக்குவிப்பதில் இம்மருத்துவமனை உறுதியுடன் உள்ளது.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை