சற்று முன்



கொன்றால் பாவம் திரைவிமர்சனம் !


வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கொன்றால் பாவம் திரைப்படம் !

 இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கொன்றால் பாவம். இந்த படத்தை தயாள் பத்மநாபன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் உட்பட இயக்குனரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா  பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த படம் ஏற்கனவே கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த மாநிலத்தின் தேசிய விருதையும் இந்த படம் வாங்கி இருக்கிறது. தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழில் கொன்றால் பாவம் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. அனைத்து மொழிகளிலும் தயாள் பத்மநாபனே இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் மல்லிகாவின் அப்பாவுக்கு உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. நன்றாக வாழ்ந்த குடும்பம் கடன் கொடுமையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் குடும்பம் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகிறது.

வறுமையின் காரணமாக மல்லிகாவிற்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது. இந்த சமயத்தில்தான் வழிப்போக்கனாக அர்ஜுன் இந்த குடும்பத்தில் சேர்கிறார். அவரிடம் இருக்கும் பணம், நகைகளை பார்த்தவுடன் அந்த குடும்பம் பேராசை படுகிறது. பின் அந்த குடும்பம் பணத்திற்கு ஆசைப்பட்டு அவனை கொள்ள நினைக்கிறது. இறுதியில் அந்த குடும்பம் அர்ஜுனை கொன்றார்களா? பணம், நகைகள் என்னானது? இறுதியில் அந்த குடும்பத்தின் நிலை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்து இருக்கிறார். வழக்கம் போல் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். வரலட்சுமி அப்பாவாக சார்லியும் ,அம்மாவாக ஈஸ்வரியும் நடித்திருக்கிறார்கள். 

பெற்றோராக நடிப்பில் அசத்தி உள்ளார் சார்லி. திரில்லர் பாணியில் கதையை இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், அதில் இன்னும் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும்.

பின்னணி இசை ஓகே.

இப்படத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத காட்சிகள் உள்ளன வழிப்போக்கனாக வரும் அர்ஜுனிடம் மல்லிகா அர்ஜுனன் மயக்க நினைக்கிறார்.

அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அடைய நினைக்கிறார் ஒன்று திருமணம் செய்து அல்லது கொன்றாவது அடைய வேண்டும் .

வீட்டில் பெற்றோர்கள் இல்லை அப்பொழுது அர்ஜுனிடம் வந்து மல்லிகா தன் பாவாடையை நகரத்திறால் அப்பொழுது அர்ஜுன் கோபத்துடன் அடிக்க கை ஓங்குகிறார் அவ்வளவுதான். ஒரு அண்ணனுக்கு அவ்வளவுதானா தங்கை தவறாக நடக்கும்போது அண்ணன் கண்டிக்க வேண்டாமா அது என்ன சஸ்பென்ஸ் ஒரு இரவுக்கு அப்புறம் தான் கூறுவேன் என்று இதில் லாஜிக் இல்லாமல் எடுத்து உள்ளார் இயக்குனர் உணர்ச்சிபூர்வமான படமாக இருக்க வேண்டும்.

அர்ஜுன் யார் என்றால் சிறுவயதில் வீட்டை விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன் சகோதரி அண்ணனிடம் தவறாக முயற்சி செய்தபோது 

நான் உன் அண்ணன் சிறுவயதில் வீட்டை விட்டுட்டு ஓடி போன அண்ணன் என்று கூறி இருக்க வேண்டும்.

ஒரு இரவு சஸ்பென்ஸ் நான் யார் என்று கூறாமல் இது போன்ற கதைகள் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் சிறுவயதில் தாய் தந்தை மற்றும் தங்கையை விட்டு ஓடிப்போன சிறுவன் பல வருடங்களுக்கு அப்புறம் தன் குடும்பத்தை தேடி வருகிறார் அப்பொழுது நான் உங்கள் மகன் என்று கூறாமல் ஒரு வழிப்போக்கன் ஒரு இரவு இங்கே தங்கிக் கொள்கிறேன் உங்கள் வீட்டில் சாப்பாடு கொடுங்கள் ஒரு இரவில் தங்குகிறேன் உங்களுக்கு உதவுகிறேன் இவர் வீட்டில் இருக்கும் போது எனது நகை பணம் வேணும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் கடனை செலுத்திக் கொள்ளுங்கள் நான் தருகிறேன் என்று எல்லாம் கூறுகிறார்.

இப்படி கூறும் அர்ஜுனை தனது மகன் அண்ணன் என்று தெரியாமல் தந்தை சார்லி தாயார் ஈஸ்வரி ராவ் மற்றும் தங்கை வரலட்சுமி அர்ஜூனை கொன்றால் தான் நம்ம கஷ்டம் தீரும் என்று அனைத்து நகையும் பணத்திற்காக கொள்கின்றனர்.

அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொள்வதற்கு திட்டம் போடுவது.

அர்ஜுன் அம்மா என்றுதான் அழைப்பான் இப்படத்தில் பசிக்குது உங்கள் கையில் சாப்பிட வேண்டும் என்று காத்திருப்பது போன்ற காட்சிகள் அம்மா பசிக்குது என்று கூறும் போது இப்படி பணத்திற்காக சாப்பாட்டில் விஷம் வைப்பது போல காட்சிகள் எல்லாம் நம் மனதை புண்படுத்துகிறது.

தனது மகன் என்று சார்லிக்கு தெரிய வரும்போது மிக அதிர்ச்சியுடன் வீட்டை நோக்கி வருகிறார் அப்பொழுது தனது மகன் இறந்து கிடக்கிறார் தங்கை கொன்று விட்டால் வரலட்சுமி.

இதுவே மற்றொருவர் மகனாக இருந்திருந்தால் மூவரும் நகை பணத்துடன் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.

தனது மகன் அண்ணன் என்று தெரிந்தவுடன் நம் மகனை நாமே கொன்று விட்டோமே என்று குற்ற உணர்ச்சியுடன் தீக்குளிக்கின்றனர். 

மூவரும் குடும்பத்துடன் இறந்து விடுகின்றனர்.

பெரிதாக பாடல் காட்சிகள் எதுவும் இல்லை. முழு படமே ஒரு வீட்டைச் சுற்றியே நகர்கிறது. ஆனால், நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஆசை, பேராசை அதிகமானால் ஒரு மனிதன் என்னெல்லாம் செய்கிறான் என்பதை படத்தின் மூலம் இயக்குனர் உணர்த்தி இருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 மொத்தத்தில் ‘கொன்றால் பாவம் தின்றால் போகும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப கதையின் கரு இருக்கிறது. கொன்றார்களா? தின்றார்களா?  

ஆக மொத்தத்தில் கொன்றால் பாவம் திரைப்படம் பேராசை பெருநஷ்டம். 

நம் மனதை கொன்றுவிட்டது கொன்றால் பாவம் திரைப்படம்.

 Rating: 2.5 / 5 


கருத்துகள் இல்லை