சற்று முன்



ஜவான் திரை விமர்சனம் !

இந்திய சினிமா உலகில் பாலிவுட் பாஷா கிங் கான்  ஷாருக் கான் நடிப்பில் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜவான். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி, சஞ்சய் தத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியாகியிருக்கும் ஜவான் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் ஆரம்பத்தில் இந்திய எல்லையில் தான் கதை துவங்குகிறது. உயிர் போகும் நிலையில் கிடக்கும் ஷாருக்கானை மக்கள் காப்பாற்றுகிறார்கள். அவர் எப்படியோ பிழைத்து விடுகிறார். அதற்குப் பிறகு அவர் ஏன் வந்தார்? அவர் யார்? என்ற பிளாஷ்பேக்கை 30 ஆண்டுகளுக்கு பிறகு என்று கதை தொடங்குகிறது. அதில் ஷாருக்கான் உடன் சேர்ந்து பெண்கள் பலர் அரசுக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் இந்தியன் தாதாக்களாக இருக்கிறார்கள்.

இவர்களை எதிர்க்கும் வில்லனாக விஜய் சேதுபதி இருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நயன்தாரா வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க நயன்தாரா முயற்சிக்கும் போது தான் நயன்-ஷாருக்கானுக்கு திருமணம் நடக்கிறது. ஆனால், அந்த குற்றவாளி தான் ஷாருக்கான். திருமணம் நடந்த அன்று தான் ஷாருக்கான் உண்மையை சொல்ல வருகிறார். அதற்குள் உண்மை அறிந்த நயன்தாரா அவரை கைது செய்கிறார். பின் வில்லன் விஜய் சேதுபதி திட்டமிட்டபடி நயன்தாரா-ஷாருக்கானை தாக்குகிறார்.

அப்போது ஷாருக்கானை காப்பாற்ற இன்னொரு ஷாருக்கான் வருகிறார். இறுதியில் இந்த இரண்டு ஷாருக்கான் யார்? என்ன சம்பந்தம்? விஜய் சேதுபதிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஷாருக்கான் என்ன தவறு செய்தார்? ஏன் அவர் குற்றவாளி? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு, டான்ஸ், ஆக்சன் காட்சி எல்லாமே சிறப்பாக இருக்கிறது.

ஆனால், சில இடங்களில் விஜய் உடைய மேனரிசத்தை அப்படியே இயக்குனர் காண்பித்து இருக்கிறார். இவரை அடுத்து போலீஸ் அதிகாரியாக வரும் நயன்தாரா ஷாருக்கானுக்கு இணையாக மிரட்டி இருக்கிறார். இவர் பின் வில்லனாக வரும் விஜய் சேதுபதி இவர்கள் இருவரையும் தூக்கி சாப்பிட்டார் என்றே சொல்லலாம். நடிப்பு, வசனம், வில்லத்தனம் என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். அதிகாரத்தை கையில் எடுப்பதும், பிரச்சனை வரும்போது அதை சமாளிப்பதும் என்று சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

நயன்தாரா மிக அற்புதமாக நடித்துள்ளார் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் சூப்பர். 

இவர்களைத் தொடர்ந்து தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு சில காட்சிகள் வந்தாலும் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அட்லி படம் என்று பலரும் எதிர்பார்ப்புடன் சென்றார்கள். அது மட்டுமில்லாமல் விஜய் படம் போல் மாஸாக, கிளாஸ் ஆக அப்படியே எடுத்துள்ளார் இயக்குனர் அட்லி.

தீபிகா படுகோனே சிறிது நேரம் வந்தாலும் மிக அழகாக நடித்துள்ளார் அவரது காட்சிகள் மனதில் நின்று விட்டன. தாய் குழந்தை பாசம் மிக அற்புதமாக நடித்துள்ளார். 

நடிகை பிரியாமணி   நன்றாக நடித்துள்ளார்.

யோகி பாபு சிறிது நேரம் வந்தாலும் அவரது காமெடி பெரிதாக இல்லை.

இது தமிழ் ரசிகர்களுக்கு யூகிக்க முடியும் காட்சிகள் தான். தமிழ் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் ஏமாற்றம் தான். இக்கதை போன்ற படங்கள் நிறைய பார்த்துவிட்டனர்.

அனிருத்தின் இசை பிரமாதம் பிஜிஎம் வேற லெவல் என்று கூறலாம். இசை பின்னனி இசை பக்க பலமாக அமைந்துள்ளது.

 விஷ்ணுவின் கேமரா  படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

சஞ்சய் தத் சிறப்பு தோற்றத்தில் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்துள்ளார்.

திரைப்படம் ஷாருக்கான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. ஹிந்தி திரையுலகில் இது ஒரு புதிய முயற்சி  ஷாருக்கான் வெற்றி படமாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை